2ம் திருமணத்திற்கு பின் மகாலட்சுமி போட்ட முதல் பதிவு!

இரண்டாம் திருமணத்திற்கு பின் சீரியல் நடிகை மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மகாலட்சுமி தற்போது இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் மகாலட்சுமி தற்போது இரண்டாம் திருமணம் செய்துள்ளார். இவர் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். மகாலட்சுமி, ஏற்கனவே திருமணம் முடிந்து அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். அவரின் திடீர் திருமணம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

மகாலட்சுமி தற்போது லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் விடியும் வரை காத்திரு என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர், சுட்டகதை நட்புனா என்னானு தெரியுமா, முருங்ககன்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் தனது திருமணம் குறித்து ரவீந்தர் பகிர்ந்துள்ள பதிவில் மகாலட்சுமி போல் பொண்ணு கிடைச்சா வாழ்க்கை நல்லாருக்கும்னு சொல்வாங்க ஆனா மகாலட்சுமியே கிடைச்சா என்று பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதோடு ரவீந்திரனோடு தான் திருமணம் செய்த செயதியை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் மகாலட்சுமி. அதில், ‘என் வாழ்க்கையில் நீ கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டசாலி. உன் அன்பினால் என் வாழ்க்கையை நிரப்புகிறாய். லவ் யூ அம்மு’ என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!