பேஸ்புக் காதலி விபரீதமுடிவு…. காதலன் அதிரடி கைது!

சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த கீர்த்திகா என்ற கல்லூரி மாணவியும், கடலூரைச் சேர்ந்த சுதீஷ் என்ற இளைஞரும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் பழகி, காதலர்களாக மாறினர்.

பின்னர், கீர்த்திகாவிடம் ஆசை வார்த்தைகள் கூறி, அவரை தனிமையில் சந்தித்து சுதீஷ் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய மறுத்து வந்ததால், கடந்த 25ம் தேதி, கடிதம் எழுதி விட்டு, கீர்த்திகா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த சுதீஷை போலீசார் தேடி வந்த நிலையில், அவரது சொந்த ஊரில் கைது செய்தனர். பின்னர் அந்த இளைஞர், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!