சுற்றுலா பயணியின் காதை கடித்த விழுங்கிய பெண் பாலியல் தொழிலாளி!

தாய்லாந்தில் குடிபோதையில் பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் சுற்றுலாப் பயணி ஒருவரின் காதைக் கடித்து, அதை முழுவதுமாக விழுங்கி உள்ள சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தாய்லாந்தில் 25 வயதுடைய காம்ப்டன் என்ற பெண் ஒருவர் 55 வயது மதிக்கக்கத்தக்க சுற்றுலா பயணியின் காதைதான் கடித்து முழுங்கியிருக்கிறார்.

அதன்படி,பாலியல் தொழிலாளியாக இருக்கும் கன்னிகா என கூறப்பட்டிருக்கும் அந்த பெண், 55 வயது முதியவரிடம் பேச முற்பட்ட போது முழு குடிபோதையில் இருந்து உள்ளார். அப்போது, போதையில் என்ன செய்வதென தெரியாத அப்பெண் அந்த முதியவரை வலதுப்புற காது மடலை முதலில் கடித்து விட்டார்,

அதை அவர் விழுங்கி இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வலியால் கதறி துடித்த அந்த நபர் கத்தி கூப்பாடு போட்டிருக்கிறார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போதையில் அட்டகாசம் செய்த கன்னிகா காம்ப்டனையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் லெப்டினண்ட் கர்னல் சைஜைய் கம்சுவ்லா தெரிவித்துள்ளார். மேலும், தன்னை கைது செய்ய விடாமல் தடுப்பதற்காக எங்களுடைய போலீஸ் அதிகாரியை அப்பெண் தாக்கி உள்ளார். அவர் செய்த அட்டூழியத்தை கண்ணால் பார்த்த ஆதாரங்கள் பல இருக்கின்றன.

பாதிக்கப்பட்டவரும் அப்பெண்ணுக்கு நிச்சயம் தண்டனை கிடைத்தாக வேண்டும் எனக் கூறியிருக்கிறாராம். இருப்பினும் நடந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!