எனக்கும் அது நடந்துருக்கு… பகீர் கிளப்பிய பிக்பாஸ் பிரபலம்.!

சினிமாவில் பாலியல் தொந்தரவு நடக்க ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான் காரணம் என தெரிவித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 படத்தில் நடிகர் சிவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குனர் அகத்தியனின் மகளான இவர், அடுத்தடுத்து அஞ்சாதே, வனயுத்தம், சென்னை 28 இரண்டாம் பாகம், கற்றது களவு, கசடதபற உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டார் விஜயலட்சுமி. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் வைல்டு காட்டு போட்டியாளராக கலந்துகொண்ட இவர் இறுதிப்போட்டி வரை முன்னேறி 3-வது இடத்தைப் பிடித்தார்.

இதனையடுத்து ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் எனும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட விஜயலட்சுமி, டைட்டில் வின்னர் ஆனதோடு ரூ.1 கோடி பரிசுத் தொகையையும் வென்றார். இந்நிலையில் சினிமாவில் நடக்கும் பாலியல் தொந்தரவு குறித்து பேட்டி ஒன்றில் ஓபனாக பேசியுள்ளார் விஜயலட்சுமி.

அதில், “சினிமாவில் கேஸ்டிங் கவுச் என்பது இருக்கிறது. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான் இதற்கு காரணம். எதோ ஒரு பெண் சம்மதிப்பதனால் தான் மற்ற பெண்களிடமும் கேட்குறாங்க, எனக்கும் இதுபோல் நடந்திருக்கிறது.

சிறுவயதில் நான் கராத்தே கற்றுக்கொள்ள சென்றபோது அந்த மாஸ்டர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அதை உடனே என் தந்தையிடம் வந்து சொன்னேன். குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே குட் டச் எது பேட் டச் எது என்பதை சொல்லிக்கொடுத்தால் இதுபோன்ற சூழல்களில் பாதுகாப்பாக இருக்கும்”. இவ்வாறு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் விஜயலட்சுமி.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!