காதலனின் HIV ரத்தத்தை உடலில் செலுத்திக்கொண்ட சிறுமி!

அசாம் மாநிலத்தில் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காதலனின் ரத்தத்தை தனது உடலில் செலுத்திக்கொண்ட 15 வயது சிறுமியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காதலுக்காக எதையும் தியாகம் செய்ய தயார் என்ற வசனங்களை சினிமாக்களில் பார்த்திருப்போம். சில உண்மை சம்பவங்களையும் கேள்வி பட்டிருப்போம். ஆனால், காதலன் மீது வைத்துள்ள அதீத காதலால் 15 வயதான சிறுமி எடுத்துள்ள முடிவு இந்தியா முழுக்க தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

அசாம் மாநிலம் சோல்குச்சிமாவட்டத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹாஜோவில் உள்ள சத்தோலாவைச் சேர்ந்த இளைஞரை முகநூலில் சந்தித்து பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். நாளாக நாளாக இவர்களது காதல் மிக தீவிரமாகியுள்ளது. ஒரு கட்டத்தில் காதலனை பிரிந்து இருக்க முடியாமல் அந்த சிறுமி மூன்று முறை வீட்டைவிட்டு வெளியேறி இளைஞருடன் தங்கியுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் காவல்துறையினர் உதவியுடன் ஒவ்வொருமுறையும் மகளை மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில், காதலனுடன் நிரந்தரமாக வாழ வேண்டி அச்சிறுமி எடுத்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் காதலன் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர். இதனால், காதலனுக்கு உள்ள பிரச்சினையை தாமும் அனுபவிக்க நினைத்த சிறுமி இளைஞரின் உடலில் இருந்து சிரஞ்சி மூலம் ரத்தத்தை எடுத்து தனது உடலில் செலுத்திக்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் அறிந்த சிறுமியின் பெற்றோர் பேரதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் கொடுத்து பின்னர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனை அடுத்து சிறுமியின் காதலனை ஹாஜோ போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவர்கள் தற்போது சிறுமியை கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் ட்விட்டரில் வைரலாகி வரும் சூழலில் பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வருவதுடன் மீம்ஸ்களையும் போட்டு வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!