வாரத்திற்கு ஒரு முறை மாஜி மனைவிகளை பார்த்துடுவேன் – ஆமீர் கான்!

தன் முன்னாள் மனைவிகளான ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ் பற்றி ஆமீர் கான் கூறியதை கேட்டு அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

பிரபல பாலிவுட் நடிகரான ஆமீர் கான் ரீனா தத்தாவை காதலித்து மணந்தார். அவர்களுக்கு ஜுனைத் என்கிற மகனும், ஐரா என்கிற மகளும் உள்ளனர். திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து ரீனாவை பிரிந்தார். அதன் பிறகு இயக்குநர் கிரண் ராவை மணந்தார். அவர்களுக்கு ஆசாத் என்கிற மகன் இருக்கிறார். 15 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பிறகு கிரண் ராவை பிரிந்துவிட்டார்.

லால் சிங் சட்டா

கிரண் ராவை பிரிவதாக அறிவிப்பு வெளியிட்ட பிறகும் லால் சிங் சட்டா படப்பிடிப்பில் அவரையும், ஆமீரையும் சேர்த்துப் பார்த்தவர்கள் வியந்தார்கள். கிரணை பிரிந்த பிறகும் அடிக்கடி சந்தித்து பேசுகிறார். இந்நிலையில் தன் முன்னாள் மனைவிகள் பற்றி ஆமீர் கான் பேசியிருக்கிறார். அவர் சொன்ன விஷயத்தை கேட்டவர்களோ, உங்களால் மட்டும் தான் இது முடியும் என்கிறார்கள்.

மாஜி மனைவிகள்

ஆமீர் கான் கூறியதாவது, என் முன்னாள் மனைவிகளை மிகவும் மதிக்கிறேன். நாங்கள் எப்பொழுதுமே ஒரே குடும்பம் தான். வாரத்தில் ஒரு முறையாவது அவர்களை சந்தித்துவிடுவேன். என்ன பிசியாக இருந்தாலும் சரி. எங்களுக்கு இடையே அன்பு, பாசம், மரியாதை இருக்கிறது என்றார்.

கரண் ஜோஹர்

லால் சிங் சட்டா பட ரிலீஸை முன்னிட்டும் நடிகை கரீனா கபூருடன் சேர்ந்து காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஆமீர். அப்பொழுது தான் தன் முன்னாள் மனைவிகள் பற்றி பேசியிருக்கிறார். ஆமீருக்கும், அவரின் முன்னாள் மனைவிகளுக்கும் ஆகவே ஆகாது என்று பேச்சு கிளம்பிய நிலையில் அவர் இப்படி விளக்கம் அளித்திருக்கிறார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!