கொடைக்கானலை சேர்ந்த யூடியூபர் பகலவன் ராஜா. இவர் திண்டுக்கல் தாடிக்கொம்பை சேர்ந்த துணை நடிகை திவ்யபாரதியை தேர்வு செய்து நடிக்க வைத்து கவிதை தொகுப்புகளை தயாரித்து தனது சேனலில் வெளியிட்டார்.
இந்நிலையில் இருவரும் காதலித்து வந்த நிலையில் பல்வேறு காரணங்களை கூறி பணம், தங்க நகைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பர்னிச்சர்கள் என ரூ.30 லட்சம் வரை வாங்கியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பகலவன்ராஜா திருமணத்துக்கு வற்புறுத்தியும் திவ்யபாரதி காலம் கடத்தியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த பகலவன்ராஜா, அவரை பற்றி விசாரித்தபோது அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பகலவன் ராஜா, திவ்யபாரதி தன்னை மோசடி செய்ததாக நேற்று திண்டுக்கல் எஸ்பி மாவட்ட அலுவலகத்தில் புகார் அளித்தார்.-News & image Credit: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!