பிரபல நடிகரின் மகள் விபரீதமுடிவு – திரையுலகினர் அதிர்ச்சி!

மறைந்த நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ஆரின் மகள் உமா மகேஷ்வரி ஹைதராபாத்தில் இருக்கும் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

என்.டி.ஆரின் இளைய மகள் உமா மகேஷ்வரி தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மறைந்த பிரபல தெலுங்கு நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ஆரின் மகள் உமா மகேஷ்வரி தன் குடும்பத்துடன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார்.

திங்கட்கிழமை மதியம் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல்நல பிரச்சனையால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை

உமா மகேஷ்வரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்கிற காரணம் இதுவரை தெரியவில்லை. உடல்நலப் பிரச்சனை தான் காரணமாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். உமாவுக்கு தீக்ஷிதா உள்பட இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். உமாவின் மகளுக்கு அண்மையில் தான் திருமணம் நடைபெற்றது.

மகள்

தீக்ஷிதா கூறியதாவது, திங்கட்கிழமை மதியம் 12 மணிக்கு தன் அறைக்குள் சென்ற அம்மா, வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை என்றார். சம்பவம் நடந்தபோது வீட்டில் நான்கு பேர் இருந்திருக்கிறார்கள். உமாவின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரபலங்கள்

உமாவின் மரண செய்தி அறிந்ததும் சந்திரபாபு நாயுடு, கல்யாண் ராம் உள்பட பல பிரபலங்கள் அவரின் வீட்டிற்கு விரைந்து வந்தார்கள். என்.டி.ஆரின் 12 பிள்ளைகளில் உமா தான் கடைசி. என்.டி.ஆருக்கு 8 மகன்கள், 4 மகள்கள். என்.டி.ஆரின். மூன்று மகன்கள் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!