நயன்- விக்கி நிஜக் காதல் பற்றி நானும் ரவுடிதான் நடிகர் சொன்ன ரகசியம்.!

விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் குறித்து நானும் ரவுடிதான் பட நடிகர் யூடிப் சேனல் ஒன்றில் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 9-ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் சென்னை மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹேட்டலில் நடைபெற்றது.

கோலிவுட் வட்டாரத்தில் நட்சத்திர காதல் ஜோடிகளாக நயன் – விக்கி இருவரும் வலம் வந்தனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் கோடம்பாக்கத்தினரும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரின் திருமணத்தையும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் கடந்த ஜுன் மாதம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நயன் – விக்கி திருமணம் முதலில் திருப்பதியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அங்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்ததால், மகாபலிபுரத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலான ஷெரட்டன் பார்க்கில் கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டு நயன் – விக்கி தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்த போது தான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இந்நிலையில் இந்தப்படத்தில் ராகுல் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான உதயபானு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையே காதல் மலர தான்தான் காரணம் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் சென்று நீங்க பார்க்க பிரபுதேவா மாதிரியே இருக்கீங்க என்று சொல்லிவிட்டு, அப்படியே நயன்தாரா மேடம் கிட்ட போய் ‘ஏன் மேடம் விக்கி பார்க்க பிரபுதேவா மாதிரியே இருக்காருல’ என்று சொன்னேன். அதன் பிறகு தான் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது என்று தெரிவித்துள்ளார் ராகுல் தாத்தா. அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!