அரூர் அருகே, ‘ஆன்லைன் ரம்மி’ சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்த, தனியார் நிறுவன ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த முத்தானுாரை சேர்ந்தவர் பிரபு, 36; தனியார் கிரானைட்ஸ் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்தார்.இவரது மனைவி பிரமிளா, 32.
இந்த தம்பதிக்கு மகள், மகன் உள்ளனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் காட்டிய பிரபு அதற்கு அடிமையாகி, பல லட்சம் ரூபாயை இழந்து கடன் சுமைக்கு ஆளாகினார்.
மேலும், பிரபுவுக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கமும் இருந்துள்ளது. நேற்று முன்தினம் ஆன்லைன் ரம்மி விளையாட்டில், 45 ஆயிரம் ரூபாயை பிரபு இழந்துள்ளார்.
இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர், நேற்று மாலை, 6:00 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொன்னேரி வி.ஏ.ஓ., ராஜா, அரூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.-News & image Credit: dinamalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!