ரகுவரனை விவாகரத்து செய்தது ஏன்..? மனம் திறந்த ரோகிணி!

நடிகர் ரகுவரனை விவாகரத்து செய்தது ஏன் என நடிகை ரோகிணி பல ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்துள்ளார்.

5 வயதில்

தமிழ் சினிமாவில் 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ரோகிணி. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரோகிணி. தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளையும் குவித்துள்ளார் ரோகிணி.

ஒரு வருஷம் ஆகிப்போச்சு யாஷிகா!

திருமணம்

தற்போதும் படங்களில் நடித்து வரும் ரோகிணி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் உள்ளார். தொலைக்காட்சி சீரியல்களில் பணியாற்றியுள்ள ரோகிணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். நடிகை ரோகிணி, தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்த நடிகர் ரகுவரனை 1996ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரகுவரன் மரணம்

இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்த ரோகிணி, மகனுடன் தனியாக வசித்து வந்தார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ரகுவரன் கடந்த 2008 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் நடிகை ரோகிணி தனது விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

குடும்ப வன்முறைகள்

மேடை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரோகிணி, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேசினார். அப்போது குடும்பங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்னமும் இருந்து வருகிறது என்ற ரோகிணி, சில பெண்கள்தான் முற்போக்கான குடும்பங்களில் வாழ்கிறார்கள் மீதமுள்ள 90 சதவீத பெண்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்றார்.

நானும் அனுபவித்தேன்

அதே குடும்ப வன்முறையை தானும் அனுபவித்ததாகவும் அதனால்தான் ரகுவரனை பிரிந்து குடும்பத்தை விட்டு வெளியே வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இனிமேலும் அங்கு வாழ முடியாது என்ற சூழ்நிலையில்தான் பிரிவு முடிவை எடுத்ததாகவும் ரோகிணி தெரிவித்துள்ளார். குடும்ப மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இதனை கூற தனக்கு இத்தனை ஆண்டுகள் ஆனதாகவும் கூறியுள்ளார்.

பாதுகாப்பு இல்லை

பொருளாதார ரீதியாக சுதந்திரமாக உள்ள தனக்கே அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது என்றும் தெரிவித்தார். ரகுவரனால் மகனை பார்த்துக்கொள்ள முடியாது என்று தெரிந்ததாலும் தனக்கு அந்த வீட்டில் பாதுகாப்பு இல்லை என்பதாலுமே தான் ரகுவரனை பிரிந்ததாக தெரிவித்துள்ளார். விவாகரத்து பெற்று 18 ஆண்டுகள் கழித்து ரோகிணி இதனை கூறியுள்ளார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!