திரையுலகை விட்டு விலகிய சிம்பு பட நடிகை.!

சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுடன் நடித்த சனா கான் சினிமாவை விட்டு விலகினார்

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு தற்போது டாப் ஹீரோவாக கலக்கி வருகின்றார்.

காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவான சிம்பு குத்து, தம், மன்மதன், வல்லவன், விண்ணை தாண்டி வருவாயா என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து சிம்பு தற்போது கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு, கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார், கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

இதில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் மாறுபட்ட நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சிம்புவுடன் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் தான் சினிமாவை விட்டு விலகியதற்கான காரணம் பற்றி பேசியுள்ளார்.

சிம்பு நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிலம்பாட்டம். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான இப்படம் மாஸ் ஹிட்டடித்தது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் சனா கான்.

சிலம்பாட்டம் படத்திற்கு பிறகு பிரபலமான சனா கான் அதன் பின் சில படங்களில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து திருமணம் செய்துவிட்டு தான் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் சினிமாவில் பணம், புகழ் நிறைய கிடைத்தாலும் நிம்மதி கிடைக்காததால் தான் சினிமாவை விட்டு விலகுவதாக தெரிவித்தார் சனா கான்.

தற்போது திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார் சனா கான் என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!