கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த நடிகர் திடீர் மரணம்!

சின்னத்திரை நடிகர் தீபேஷ் பான் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் தொலைக்காட்சி மிகவும் பிரபலமான காமெடி கா கிங் கான், பூட்வாலா, காமெடி கிளப், எப்ஐஆர், சன் யார் சில் மார் மற்றும் சேம்ப் உள்ளிட்ட பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தீபேஷ் பன்.

பாபிஜி கர் பர் ஹெயின் என்ற தொடர் மூலம் பாலிவுட்டில் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனார். இதில் மால்கன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் தீபேஷ்.

மும்பையில் வசித்து வந்த தீபேஷ் தனது குடியிருப்பு அமைந்துள்ள தாஹிர் பகுதியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தீபேஷ் பன் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவருக்கு தற்போது 41 வயது ஆகிறது. மறைந்த நடிகர் தீபேஷுக்கு மனைவி மற்றும் ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. தீபேஷ் கிரிக்கெட் விளையாட வருவதற்கு முன் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ததாக கூறப்படுகிறது.

41 வயதில் நடிகர் தீபேஷ் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி அறிந்து பாலிவுட் வட்டாரமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. நடிகர் தீபேஷின் மறைவுக்கு ஏராளமான சின்னத்திரை மற்றும் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தீபேஷின் திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!