டிஷர்ட்டை தூக்கி காட்டினார்… ரேகா நாயரை டேமேஜ் செய்த பயில்வான்!

தன்னிடம் நட்டநடு ரோட்டில் சண்டைப்போட்ட ரேகா நாயர் குறித்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன். நிர்வாணமா நடிப்பேன் என்றாலே எதற்கும் தயார் என்றுதான் அத்தம் என ரேகா நாயரை கடுமையாக விமர்சித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

நிர்வாணமா நடிப்பேன் என்றாலே எதற்கும் தயார் என்றுதான் அத்தம் என ரேகா நாயரை கடுமையாக விமர்சித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்த நடிகை ரேகா நாயரை விமர்சித்திருந்தார் பயில்வான் ரங்கநாதன். இதனால் கடுப்பான ரேகா நாயர் நேற்று முன்தினம் காலை பீச்சில் வாக்கிங் சென்ற பயில்வான் ரங்கநாதனை பிடித்து உலுக்கி எடுத்தார்.நிர்வாணமா நடித்தால் உனக்கென்ன? நான் என்ன உன் பொண்டாட்டியா? என்று கேட்டு செருப்பு பிஞ்சுரும் என கன்னாபின்னாவென பேசினார்.

பயில்வான் வீடியோ

ரேகா நாயருக்கும் பயில்வான் ரங்கநாதனுக்கும் நடந்த சண்டை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன். அதில் அவள் இவள் என ஏக வசனத்துடன் ரேகா நாயரை மொத்தமாக டேமேஜ் செய்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். அவர் பேசியிருப்பதாவது, நடிகை என்று சொல்லப்படுகிற ரேகா நாயர் பீச்சில் என்னோடு ரகளை செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

செட்டப் செய்த நாடகம்

அந்த சம்பவம் அவர் செட்டப் செய்த நாடகம். என்னை எப்படி நிர்வாணமா நடித்தேன் என பேசலாம் என்றார். நீ நிர்வாணமாக தானே நடித்திருக்கிறாய் என்றேன். உடனே சட்டையை தூக்கி காட்டி பாக்குறியா பாக்குறியா என்று கேட்டார். அப்போது என்னுடன் வாக்கிங் ஓய்வு பெற்ற எஸ்பி, ஆடிட்டர், நீதித்துறையை சேர்ந்தவர்கள் இருந்தனர். ரேகா நாயரை போலீஸில் புகார் கொடு, போலீஸ் ஸ்டேஷன் போகலாம் வா என்றதுமே ஓடிவிட்டார். என் கையை பிடித்து இழுத்தார் ரேகா நாயர்.

தூக்கி காட்டி

டிஷர்ட்டை தூக்கி காட்டி எல்லாத்தையும் கழட்டுறேன், பாக்கிறாயா என்று கேட்டார். நிர்வாணமா நடிப்பேன் உனக்கென்ன என்றார். மறைந்த விஜே சித்ரா அவரது அறையில் காண்டம் இருந்ததாக ரேகா நாயர்தான் கூறினார். அதைதான் நான் கூறினேன். என் மகள்களை நான் நன்றாக வளர்த்துள்ளேன். சித்ரா விஷயத்தில் ரேகா நாயர் ஏன் போலீஸிடம் போகவில்லை? ரூமில் காண்டம் இருந்ததை ஏன் சொல்லவில்லை. போலீஸிடம் அழைத்ததும் ரேகா நாயர் ஓடிவிட்டார்.

அதானே அர்த்தம்

ரேகா நாயர் இதை விளம்பரத்திற்காக செய்துள்ளார். நான் பேசியதை யூட்யூப் பிளாக் செய்யவில்லை, மானிட்டரிங் செய்யவில்லை. நான் அருவருப்பாக பேசுவதில்லை. நானே கமிஷனர் அலுவலகத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறேன். எனக்கு இருக்கும் ஆதரவை பார்த்து பொறாமையில் இருக்கிறார்கள். நடு ரோட்டில் நின்று நிர்வாணமா நடிப்பேன் என்று கூறினாலே எதற்கும் தயார் என்று தானே அர்த்தம்.

எதற்கும் துணிந்தவள்

எதற்கும் துணிந்தவள் ரேகா நாயர், அவள் அளவுக்கு நான் இறங்கவில்லை. இப்போது புதிய தகவல் போலீஸ் மீது புகார் கூறுகிறார் ரேகா நாயர். புகார் அளித்தால் போலீசார் கண்டு கொள்வதில்லை என்று கூறுகிறார். ரேகா நாயர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப் போகிறேன். கமிஷனர் அலுவலகத்தில் நேரடியாக என் மீது சைபர் கிரைமில் ரேகா நாயர் புகார் அளிக்கட்டும்.

தெரு நாய் குரைத்தால்

ஆண்கள்தான் பெண்களை கையைபிடித்து இழுப்பார்கள். ரேகா நாயர் என் கையை பிடித்து இழுத்தார். நான் கோபப்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும். இந்த சட்டம் பெண்களுக்கு ஆதரவாகதான் இருக்கும். அவளுக்கும் நமக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இந்த மாதிரி தெரு நாய் குரைத்தால் பயப்படுபவன் நான் இல்லை. நீங்கள் என்ன மிரட்டினாலும் உங்கள் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றுவேன்.

சதையை காட்டாதீர்கள்

சினிமாவில் சில சாக்கடைகள் உள்ளது அதை ஒழிக்க வேண்டும். நடிப்பை மட்டும் காட்டுங்கள். அந்தரங்க உறுப்புகளையும் சதையையும் காட்டி வியாபாரம் செய்யாதீர்கள். உங்கள் மிரட்டலுக்கு இந்த பனங்காட்டு நரி அஞ்சாது. தனக்கு வாய்ப்பளித்த நடிகர் பார்த்திபனையும் அவதூறாக பேசினார் ரேகா நாயர். இவ்வாறு ரேகா நாயரை கடுமையாக விளாசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!