நம்பவே முடியல… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஜி.வி. பிரகாஷ்.!

68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு விழாவில் சிறந்த இசையப்பாளருக்கான விருது ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் திரைத் துறையில் பல்வேறு பிரிவுகளுக்கு விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தமிழ் சினிமாவினரும் பல தேசிய விருதுகளை குவித்துள்ளனர்.

இந்தியாவிலேயே சினிமா படங்கள் எடுப்பதற்கு உகந்த மாநிலமாக, மத்திய பிரதேசத்தை தேசிய விருதுக்கான தேர்வுக் குழுவினர் தேர்வு செய்தனர். சிறந்த தமிழ் படமாக, வசந்த் இயக்கத்தில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவந்த ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் அறிவிக்கப்பட்டது.

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படம் ஐந்து விருதுகளை குவித்துள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு சூரரைப்போற்று படத்திற்காக வழங்கப்படும் என தேர்வுக் குழுவினர் அறிவித்துள்ளனர். இது சூர்யா மற்றும் ஜி.வி. பிரகாஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தேசிய விருது வாங்கவுள்ள ஜி.வி. பிரகாஷுக்கு டைம்ஸ் ஆப் இந்தியா சமயம் தமிழ் சார்பாக வாழ்த்து தெரிவித்த போது தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்ட போது, போன் வந்துட்டே இருக்கு. என்னால நம்பவே முடியல. பெரிய சர்ப்ரைஸா இருக்கு. சுதா தான் போன் பண்ணி சொன்னாங்க.

நடிப்புக்காகவும் கூடிய சீக்கிரம் வாங்குவேன். சூர்யா சாருக்கு விருது அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சியா இருக்கு. மேலும் தமிழக மக்களுக்குக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார். தனது ட்விட்டர் பக்கத்திலும் தனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதிற்கு மகிழ்ச்சி தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!