விமானத்தில் மகன்தான் ‘பைலட்’ என்று தெரியாமல் பயணம் செய்த பெற்றோர்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் கமல்குமார். விமானியான இவர் ஜெய்ப்பூருக்கு செல்லும் விமானத்தை இயக்கினார். அந்த விமானத்தில் கமல்குமாரின் பெற்றோர் பயணம் செய்தனர். ஆனால் அந்த விமானத்தை தங்களது மகன்தான் இயக்க உள்ளார் என்று அவர்களுக்கு தெரியாது.

அப்போது விமானி அறையில் இருந்து கமல்குமார் வெளியே வந்து தனது பெற்றோர் முன்பு நின்றார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை பார்த்து சிரித்தனர். கமல்குமாரின் தாய் அவரது கையை பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பின்னர் தாய், தந்தையை விமானி அறைக்கு அழைத்து சென்று அங்கு இருவரையும் சிறிது நேரம் அமர வைத்து நெகிழ்ந்தார். இந்த வீடியோவை கமல்குமார் இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டார். அதில், நான் பறக்கத் தொடங்கியதில் இருந்து இதற்காக தான் காத்திருந்தேன்.

இறுதியாக அவர்களுடன் ஜெய்ப்பூருக்கு விமானத்தில் பறக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு சிறந்த உணர்வு என்று கூறி உள்ளார். கமல்குமாரின் இந்த செயலை சமூக வலைதளங்களில் பலர் பாராட்டி உள்ளனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!