பள்ளி மாணவி இறப்பதற்கு முன்பு நடந்து செல்லும் வீடியோ.. வெளியானது சிசிடிவி காட்சிகள்!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்பதற்கு முன்னபாக பள்ளி வகுப்பறையிலும், இரண்டாவது மாடிக்கு நடந்து செல்லும் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த 17 வயதான மாணவி கடந்த 12 ஆம் தேதி இரவு மர்மமான முறையில் இறந்துள்ளார். அவர் விடுதி மாடியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததாக சொல்லப்படுகிறது.

இந்த விவகாரத்தால் கனியாமூர் பகுதியில் பலத்த கலவரம் வெடித்து நூற்றுகணக்கானோர் பள்ளியை சூறையாடினர். இது தொடர்பாக கைது நடவடிக்கையும் நடந்து வரும் சூழலில் மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை நடத்தவேண்டும் என மாணவியின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டனர்.


இந்நிலையில், மறுபிரேத பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால், மாணவியின் பிரேத பரிசோதனையின் போது தங்கள் தரப்பு மருத்துவரை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், மாணவி விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக உச்ச நீதிமன்றம் அனுமதித்த நிலையில் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், பிற்பகல் 1 மணிக்கு மேல் ஸ்ரீமதியின் பிரேதத்தை பெற்றுக் கொள்வதாக பெற்றோர்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் நேரத்திற்கு சற்று முன்பாக படிக்கும் அறையிலிருந்து, விடுதி அமைந்துள்ள 3வது மாடிக்கும் செல்லும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு மாணவி மாடிக்கு சென்றுள்ளார். இரவு 10.30 மணியளவில் மாணவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மறுநாள் காலை 6 மணியளவில்தான் உடலை, பள்ளியின் காவலாளி பார்த்ததாக மாணவியின் தாயார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!