பட்டப்பகலில் டி.எஸ்.பி மீது லாரி ஏற்றி சுரங்க மாபியா கும்பல் அட்டூழியம்!

லாரி டிரைவர் அவர் மீது லாரியை ஏற்றினார்.இதில் அந்த அதிகாரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தலைநகர் புதுடெல்லியை ஒட்டி அமைந்துள்ள அரியானா மாநிலத்தில், சுரங்க மாபியா கும்பல் ஒன்று பட்டப்பகலில், ஒரு மூத்த போலீஸ் அதிகாரி மீது லாரியை ஏற்றி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானாவில் ஆரவல்லி மலைத்தொடருக்கு அருகில் உள்ள பச்கான் என்ற இடத்தில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி சுரேந்திர சிங் பிஷ்னோய்க்கு தகவல் கிடைத்தது.

உடனே இன்று காலை 11 மணியளவில் அவர் போலீஸ் குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்றார். போலீசாரை கண்டதும், சட்டவிரோத சுரங்கத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அப்போது அந்த அதிகாரி நடுவழியில் நின்றுகொண்டு, கல் ஏற்றி சென்ற வாகனங்களை நிறுத்துமாறு சைகை காட்டினார்.

ஆனால் அதில் ஒரு லாரியின் டிரைவர் அவர் மீது லாரியை ஏற்றினார். இதில் அந்த அதிகாரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். ஏனைய சில போலீசார் படுகாயமடைந்தனர்.

இந்த கொடூரத்தை நிகழ்த்திவிட்டு தப்பியோடிய நபர்களை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!