சீக்கிரமா பறிச்சிட்டீங்க… கணவர் குறித்து மீனா உருக்கமான பதிவு!

தனது கணவர் வித்யா சாகர் குறித்து நடிகை மீனாவின் சமூக வலைதள பதிவு ரசிகர்களை கலங்க செய்துள்ளது.

கணவர் மரணத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை மீனா.


நடிகை மீனா மறைந்த தனது கணவர் குறித்து சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டிருப்பது காண்போரை கலங்க செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் 1990 மற்றும் 2000களில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், பிரபு, கார்த்தி என அந்தக் காலக்கட்டத்தில் உச்சத்தில் இருந்த நடிகர்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றியுள்ளார் மீனா.

நுரையீரல் தொற்று

சினிமாவில் பீக்கில் இருந்தபோதே பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்ற சாஃப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் மீனா. திருமணம் ஆன பிறகும் தனக்கு ஏற்ற கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கணவர் மரணம்

இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார் வித்யாசாகர். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்ததோடு நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் மீனா வித்யாசாகர் தம்பதியின் 13வது திருமண நாள் வந்தது.

மீனாவின் பதிவு

கணவர் இறந்த 2 வாரங்களுக்குள்ளேயே திருமண நாள் வந்தது நடிகை மீனாவுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு திருமண நாளில் தனது கணவருக்கு திருமண நாள் வாழ்த்து கூறி மீனா பதிவிட்ட இன்ஸ்டா போஸ்ட் வைரலானது. இந்நிலையில் தனது கணவர் மரணத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார்.

பறிக்கப்பட்டீர்கள்…

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, ‘நீங்கள் எங்களின் அழகான ஆசீர்வாதமாக இருந்தீர்கள், ஆனால் மிக விரைவில் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டீர்கள். எங்கள் (என்) இதயங்களில் என்றென்றும் இருப்பீர்கள். அன்பு மற்றும் பிரார்த்தனைகளை அனுப்பியதற்காக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நல்ல இதயங்களுக்கு நானும் எனது குடும்பத்தினரும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

மீனா உருக்கம்

எங்களுக்கு அவர்கள் கண்டிப்பாக தேவை. அன்பையும் அக்கறையையும் ஆதரவையும் எங்களுக்கு பொழியும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைக் கொண்டிருப்பதற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உங்களின் அன்பை உணர்கிறோம்’ இவ்வாறு நடிகை மீனா உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!