கைலாசாவுக்கு ராணியாக பார்க்கிறார் ப்ரியா ஆனந்த்!

ப்ரியா ஆனந்த் குசும்புக்காரி, நித்யானந்தாவின் கைலாசாவுக்கு ராணியாக பார்க்கிறார் என்று சமூக வலைதளவாசிகள் கலாய்க்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி படங்களில் நடித்து வருபவர் ப்ரியா ஆனந்த். பார்க்க பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கும் ப்ரியா ஆனந்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஓ.பன்னீர்செல்வத்திற்கு அடுத்த ஸ்கெட்ச் – தட்டி தூக்கும் எடப்பாடி பழனிசாமி!

இந்நிலையில் அவர் அளித்த பேட்டி தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. பேட்டி ஒன்றில் ப்ரியா ஆனந்த் கூறியதாவது,

எனக்கு நித்யாயனந்தா சாமியை திருமணம் செய்து கொள்ளும் ஆசை இருக்கிறது. அவர் மீது எத்தனை புகார்கள் வந்தாலும் ஆயிரக்கணக்கான பக்தர்களால் வணங்கப்படுகிறார்.

நான் நித்யானந்தாவை திருமணம் செய்து கொண்டால், என் இரண்டாவது பெயரை மாற்ற வேண்டியது இல்லை என்றார்.

நித்யானந்தா மீது பாலியல் புகார்கள் இருக்கிறது. தேடப்படும் நபரான நித்யானந்தா கைலாசா என்கிற புது நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்தார். அங்கிருந்து அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் ப்ரியா ஆனந்தின் பேட்டியை பார்த்தவர்களோ, அவர் குசும்புக்காரி, கைலாசாவுக்கு ராணியாக பார்க்கிறார் என்று கலாய்க்கிறார்கள்.

ப்ரியா ஏதோ நித்தியை வச்சு காமெடி பண்ணியிருக்காங்க. அதை போய் பெருசா எடுத்துக்கிட்டு பேசலாமா என அவரின் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!