வீதியில் படுத்தபடி மது அருந்திய டிப்-டாப் ஆசாமி: வைரலாகும் வீடியோ!

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை என்றால் மிக கொண்டாட்டம்தான். வெளிமாநில சுற்றுலா பயணிகள் புதுவையில் அதிகமாக குவிவது வழக்கம்.

புதுவையில் கிடைக்கும் விதவிதமான மதுவை வாங்கி அருந்துவர். இதுபோல மதுவுக்கு ஆசைப்பட்டு ஒருவர் வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட், பெல்ட், தொப்பி, கண் கண்ணாடி அணிந்து வந்திருந்தார்.

பரபரப்பான மிஷன் வீதியில் காலணி தைக்கும் கடை விடுமுறை என்பதால் மூடி இருந்தது. அதன் முன் பிளாஸ்டிக் விரிப்பை விரித்து, கவிழ்ந்து படுத்து கொண்டு கண்ணாடி டம்ளரில் மதுவை ஊற்றினார்.

சைடிஷ் வைத்துக்கொண்டு ஜாலியாக படுத்துக் கொண்டே மது அருந்தினார். பரபரப்பாக காணப்படும் வீதியை பற்றி கவலையின்றி தனக்குள்ளே பேசி கொண்டு அவர் மது குடிப்பதை அவ்வழியே சென்ற ஒருவர் வீடியோ எடுத்து பதிவிட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!