நித்தியை கல்யாணம் பண்ணிக்க ஆசை – பிரபல நடிகை பகீர்.!

நடிகை பிரியா ஆனந்த் நித்யானந்தாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வருப்பவர் நித்யானந்தா. இவர் திடீரென நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு தனித்தீவை வாங்கி அதற்கு கைலாசா என பெயரிட்டிருந்தார். இந்நிலையில் நித்யானந்தாவை திருமணம் செய்து கொள்ள ஆசை என பிரபல நடிகை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த மார்ச் மாதம் முதல் நித்யானந்தா குறித்த பேச்சுக்கள் எழவில்லை. அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பகிறது. மேலும் அவர் லைவில் தோன்றியே 3 மாதங்கள் ஆயிற்று. அவருக்கு வென்டிலேட்டர், பல்ஸ்மீட்டர் எல்லாம் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் திரும்ப வந்துட்டேன் என எழுதி ஒரு கடிதத்தை தனது முகநூல் பக்கத்தில் நித்யானந்தா வெளியிட்டிருந்தார். இன்றும் கைலாசாவில் நடிகை ரஞ்சிதா, சில சிஷ்யைகள், சிஷ்யர்கள் புடைச்சூழ இருந்து வருகிறார். தற்போது இவரை திருமணம் செய்து கொள்ள பிரபல நடிகை விருப்பம் தெரிவித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘வாவனன்’ படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த். இவர் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நித்யானந்தாவை எனக்கு மிகவும் பிடிக்கும். நித்யானந்தாவில் நித்யானந்த் என இருக்கிறது. என் பெயர் பிரியா ஆனந்த், எங்களுக்கு திருமணம் நடந்தால் நான் பெயரை மாற்ற வேண்டிய தேவையே இருக்காது.

நித்யானந்தாவுக்கு மக்களை ஈர்க்கத் தெரியும். அவரை இத்தனை பேர் பாலோ செய்கிறார்கள் என்றால் அவரிடம் ஏதோ இருக்கிறது என்றுதானே அர்த்தம் என கூறியுள்ளார். பிரியா ஆனந்த் ஏற்கனவே தனது சமூக வலைத்தள பக்கங்களில் நித்யானந்தா குறித்த வீடியோக்களை அவ்வப்போது பகிர்வார். இந்நிலையில் நித்தியை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென அவர் கூறியுள்ளதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!