திடீரென மாயமான சிறுவன்… பள்ளத்தில் பிணமாக மீட்பு!

தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியை சேர்ந்த சிறுவன் வேதந்த் ஜாதவ் (வயது6). இவன் இன்று காலை 11.30 மணியளவில் வீட்டருகே விளையாடி கொண்டு இருந்தபோது திடீரென மாயமானான். இதையடுத்து குடும்பத்தினர் சிறுவனை தேடினர்.

இதில் அவன் வீட்டருகே கட்டுமான பணிகள் நடந்து வந்த இடத்தில் லிப்ட் அமைக்க தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்டான். இதையடுத்து நடந்த விசாரணையில், சிறுவன் விளையாடும் போது தெரியாமல் மழை நீர் நிரம்பி இருந்த பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல மழை காரணமாக மும்ரா பைபாஸ் சுங்க சாவடி அருகே மலையில் இருந்து பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்தன. எனினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தானே தீயணைப்பு துறையினர் பாறை உருண்டு விழுந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!