தெரிந்துதான் அப்படி ஒரு பதிவை போட்டீங்களா மீனா!

நடிகை மீனா தனது கணவரை பறிகொடுத்துள்ள நிலையில் அவரது கடந்த ஆண்டின் திருமண நாள் பதிவை பார்த்து வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. தற்போதும் வயதுக்கு ஏற்ற கேரக்டர்களை தேர்வு செய்து சினிமாவில் பிஸியாக வலம் வருகிறார் மீனா. அதோடு சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

கணவர் வித்யா சாகர்

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த மீனா, பீக்கில் இருந்தபோதே திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். 2009 ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்ற சாஃப்ட்வேர் என்ஜினியரை திருமணம் செய்தார் மீனா.

கணவர் மரணம்

இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி இரவு நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 6 மாதங்களாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வித்யா சாகர் ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து மரணத்தை தழுவினார்.

திருமண நாள்

மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் திருமணம் ஆகி 13 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில் வித்யாசாகரின் மரணம் சினிமா பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மீனாவின் திருமண நாள் வரும் 12 ஆம் தேதி வரவுள்ளது. திருமண நாளுக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லை.

கடந்த ஆண்டு

14வது திருமண நாளை இரண்டு வாரங்களில் கொண்டாட இருந்த நிலையில் கணவரை அநியாயமாக பறிகொடுத்துள்ளார் மீனா. இந்நிலையில் கடந்த ஆண்டு தனது திருமண நாளின் போது மீனா ஷேர் செய்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

வானவில்லாய்…

கடந்த ஆண்டு தனது திருமண நாளின் போது, மீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, வானவில் போல என் வாழ்வில் வந்து அதை அழகாக வண்ணமயமாக்கி விட்டாய். ஒன்றாக இருப்பது அற்புதம் மேலும் மை ஃபேவரைட்.. நீங்கள் கொடுத்த புன்னகையை என்றென்றும் அணிந்திருப்பேன்… ஹேப்பி அன்னிவர்சரி கணவரே என குறிப்பிட்டுள்ளார்.

அப்போதே தெரிந்ததோ..

இதனை தற்போது பார்த்து பார்த்து வேதனைப்பட்டு வருகின்றனர் ரசிகர்கள். வானவில் தோன்றி மறையும்… இப்படி ஒரு துயரம் நிகழ போவதை தெரிந்துதான் கடந்த ஆண்டே பதிவிட்டிர்களா என கேட்டு வருகின்றனர். மேலும் பலர் உங்களின் வானவில் மறைந்துவிட்டது மேடம் என்று பதிவிட்டும் கலங்கி வருகின்றனர் ரசிகர்கள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!