கள்ள உறவு… மனைவி தோளில் கணவன் – ஊர் முழுக்க சுற்ற வைத்த கொடூரம்!

மத்தியபிரதேச மாநிலம் டிவாஸ் மாவட்டம் பொர்படவ் கிராமத்தை சேர்ந்த நபர் மங்கிலால். இவரது மனைவிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த வேறொரு நபருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மங்கிலால் தனது மனைவியை உறவினர்களுடன் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளார். அந்த பெண்ணை கடுமையாக தாக்கி, உடைகளை கலைந்து மானபங்கம் செய்துள்ளனர்.

பின்னர், அந்த பெண்ணை அவரது கணவர் மங்கிலாலை தோளில் சுமக்க வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரை தோளில் சுமந்தபடி ஊர் முழுவதும் சுற்றவைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பரப்பப்பட்டது.

இந்த வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் கணவன் மங்கிலால் உள்பட 11 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!