கப்பலின் அடியில் பழுது பார்க்கும் ஊழியர் மர்ம மரணம்; நடந்தது என்ன..?

தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ளே கப்பலில் நீரீல் மூழ்கி பழுதுபார்க்கும் ஊழியர் மர்மமான முறையில் மரணம்.

தூத்துக்குடி டுவிபுரம் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ். இவர் கடலில் மூழ்கி 300 அடி ஆழம் வரை சென்று பல்வேறு பணிகளை செய்யும் டைலர் பயிற்சி முடித்துள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடி துறைமுகத்திற்கு பியர்ல் ஷிப்பிங் நிறுவனம் சார்பில் எம். வி. ஸ்டார்க் என்ற கப்பல் பழுதுபார்க்கும் பணிக்காக வந்துள்ளது. இந்த கப்பலின் அடியில் பழுது பார்க்கும் பணிக்காக நேற்று மதியம் சாம்ராஜ் சென்றுள்ளார்

அப்போது கடலில் சுமார் 4 மீட்டர் அளவு மூழ்கி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் கடலிலேயே திடீரென மரணம் அடைந்துள்ளார்.

மேலும் சாம்ராஜின் உடலில் காயங்கள் இருந்துள்ளன. இதை அடுத்து சாம்ராஜ் மரணத்தை விசாரணை செய்த கடலோர பாதுகாப்பு போலீசார் விபத்து வழக்காக பதிவு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சாம்ராஜின் உறவினர்கள் உரிய பாதுகாப்பு இன்றி கடலில் இறங்கி வேலை செய்ய சொன்னதாலும் அவரது உடலில் காயங்கள் இருப்பது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது எனவே கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இதில் சம்பத்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த சாம்ராஜ்க்கு கடந்த 29-ம் தேதி கல்யாண நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!