கணவரை இழந்த மீனாவின் உருக்கமான வேண்டுகோள்!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் ஜூன் 28-ந் தேதி இரவு காலமானார். 48 வயதாகும் இவருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நுரையீரலில் தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில், ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்து சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் உயிரிழந்தார். மீனாவின் குடும்பம் அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மேலும் திரைப்பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். வித்யாசாகரின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது இறுதி சடங்கு முடிந்ததும் உடல் தகனம் செய்யப்பட்டது.

மேலும், வித்யாசாகரின் மரணம் குறித்து பல வதந்திகள் வெளியாகின. இதனை கண்டிக்கும் வகையில் நடிகை குஷ்பு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீனா பதிவு

இந்நிலையில், நடிகை மீனா தற்போது இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் என் கணவரின் இறப்பினால் ஆழ்ந்த சோகத்தில் உள்ளேன். ஊடகத்தினர் இந்த சூழ்நிலையில் எங்கள் தனியுரிமையை மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் மேலும் தவறான செய்திகளை பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள். இந்த கடினமான சூழலில் என்னுடன் இருந்த நல் உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!