உடலை கட்டியணைத்து எழுந்திரிங்க அப்பா… என கதறிய நைனிகா!

தந்தையின் உடலை கட்டியணைத்து எழுந்திரிங்க அப்பா என நைனிகா கதறியது அங்கு கூடியிருந்தவர்களை கலங்க வைத்துள்ளது.


தமிழ் சினிமாவில் 1990 மற்றும் 2000களில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. அப்போது பீக்கில் இருந்த அனைத்து நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். குறிப்பாக உச்ச நடிகர்களான ரஜினி மற்றும் கமலுடன் நடித்துள்ளார் மீனா.

கடந்த 6 மாதங்களாக

நடிகை மீனா பீக்கில் இருந்தபோதே அதாவது கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக நுரையீரல் தொற்று பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த வித்யாசாகர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.

சுயநினைவில்லாமல்

மாற்று நுரையீரலுக்காக காத்திருந்த நிலையில் கடந்த 95 நாட்களாக சுயநினைவில்லாமல் இருந்த வித்யாசாகர் நினைவு திரும்பாமலே இறந்துபோனார். அவரது மறைவு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. வித்யாசாகருக்கு நடிகை மீனாவும் அவரது மகளுமே அனைத்து இறுதிச்சடங்குகளையும் செய்தனர்.

அப்பா மீது பிரியம்

நடிகை மீனா இறுதியாக தனது ஆசை கணவருக்கு அன்பு முத்தம் கொடுத்த தகவல் வெளியாகி கலங்க வைத்த நிலையில் தற்போது அவரது மகள் குறித்த தகவல் வெளியாகி கண்ணீர் விட வைத்துள்ளது. அதாவது நைனிகாவுக்கு தனது அப்பா என்றால் அவ்வளவு பிரியமாம். வித்யாசாகரும் நைனிகா மீது உயிரையே வைத்திருந்தாராம்.

எழுந்திரிங்கப்பா…

இந்நிலையில் அப்பாவின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்ததும், அதனை பார்த்த நைனிகா அப்பா எழுந்திரியுங்கள் என கதறி அழுதுள்ளார். அப்பாவின் உடலை தட்டியப்படியே எழுந்திரியுங்கள் என அவர் கதறிய தகவலை அங்கு கூடியிருந்த பிரபலங்கள் தெரிவித்துள்ளனர். கதறியழுத நைனிகாவை பார்த்து அவரது பாட்டி, அதாவது மீனாவின் அம்மாவும் கதறிய தகவலும் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!