கணவரின் அஸ்தியை காத்திருந்து பெற்ற மீனா… கையில் பெட்டியுடன்.. வைரலாகும் போட்டோ!

நடிகை மீனா தனது கணவரின் அஸ்தியை கையில் வைத்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று முன்தினம் இரவு காலமானார். 48 வயதான வித்யா சாகர் கடந்த 6 மாதங்களாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 95 நாட்களாக சுய நினைவில்லாமல் எக்மோ சிகிச்சையில் இருந்த வித்யாசாகர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

13 ஆண்டுகள்

மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 12 வயதில் நைனிகா என்ற மகள் உள்ளார். இன்னும் 2 வாரங்களில் 14 வது திருமண நாளை கொண்டாட இருந்த நிலையில் வித்யாசாகர் மரணமடைந்தது நடிகை மீனாவை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

ஆரத்தழுவி முத்தம்

வித்யாசாகரின் உடல் நேற்று பிற்பகல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மீனாவும் அவரது மகளுமே இறுதிச்சடங்குகளை செய்தனர். தகனம் செய்யப்படுவதற்கு முன்பாக தனது கணவரை ஆரத்தழுவி முத்தம் கொடுத்தார் நடிகை மீனா.

கணவரின் அஸ்தி

அந்த வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கலங்க வைத்தது. இந்நிலையில் நடிகை மீனா, பெசன்ட்நகர் மின் மயானத்தில் இருந்து கையில் ஒரு பெட்டியுடன் வெளியேறும் போட்டோக்கள் வெளியாகியுள்ளது. வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு 2 மணி நேரம் மயானத்தில் காத்திருந்த மீனா தனது கணவரின் அஸ்தியை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். அந்த போட்டோக்கள்தான் தற்போது வெளியாகியுள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!