பெரிய பை நிறைய சாக்லேட்… வித்யாசாகரை முதலில் வேண்டாம் என்ற மீனா!

மீனாவை முதல்முறையாக பார்க்க வந்தபோது வித்யாசாகர் செய்த காரியம் தான் அவரை பெரிதும் கவர்ந்துவிட்டது.

அப்பா, அம்மா பார்த்த பையனான வித்யாசாகரை கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி திருமணம் செய்தார் மீனா. அவர்களுக்கு நைனிகா என்கிற மகள் இருக்கிறார். இந்நிலையில் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னதாக சிம்ப்ளி குஷ்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மீனா.

அப்பா, அம்மா பார்த்த பையனை தான் கட்டிக்கிட்டீங்க. ஆனால் அவரை பார்த்ததுமே முதலில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அதன் பிறகு ஓகே பண்ணீங்க. அது என்ன கதை என்று கேட்டார்.

அதற்கு மீனா கூறியதாவது,

ஆமாம், அப்படித் தான் நடந்தது. ஜாதகம் பார்த்தவர் இதை விட நல்லது அமையுமே என்றார். உடனே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். பிறகு என் ஆன்ட்டி பேசி தான் எல்லாம் நடந்தது.

ஆபீஸ் விஷயமாக சீனாவுக்கு சென்றிருந்தார் வித்யாசாகர். அங்கிருந்து நேராக சென்னை வந்து என்னை முதல்முறையாக சந்தித்தார்.


ஒரு பையுடன் வந்தார். அந்த பை முழுக்க சாக்லேட் இருந்தது. எனக்கு சாக்லேட் பிடிக்கும் என்று தெரிந்து பெரிய பை நிறைய வாங்கி வந்தார். அது என்னை கவர்ந்தது. எனக்காக இவ்வளவு செய்தாரே என்று தோன்றியது என்றார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!