நடிகர் விஜயகாந்துக்கு காலில் 3 விரல்கள் அகற்றம் – தொண்டர்கள் அதிர்ச்சி!

விஜயகாந்திற்கு காலில் 3 விரல்கள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணாமாக அறுவை சிகிச்சை செய்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருக்கும் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். கட்சி நடவடிக்கைகளை அவரின் குடும்பத்தினர் கவனித்துக் கொள்கிறார்கள். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை. விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன.

விஜயகாந்த அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த வகையில் அண்மையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவரது காலில் இருந்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அவரது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை செய்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!