நீண்டநாள் காதலரை கரம் பிடித்தார் பாலா பட நடிகை… வைரலாகும் போட்டோஸ்!

பிரபல நடிகையான மது ஷாலினி தனது நீண்ட நாள் காதலரான நடிகர் கோகுல் ஆனந்தை திருமணம் செய்தார்.

பிரபல தெலுங்கு நடிகை மது ஷாலினி. மாடலாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் உள்ளார். தமிழில் 2007ஆம் ஆண்டு வெளியான பழனியப்பா கல்லூரி படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து பதினாறு, பிரம்மன், தூங்காவனம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தேசிய விருது இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். இதன் மூலம் பெரும் பிரபலமானார்.


மது ஷாலினி 2019ஆம் ஆண்டு வெளியான பஞ்சராக்ஷரம் படத்தில் நடிகர் கோகுல் ஆனந்துடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. கோகுல் ஆனந்த் தமிழில் 2017ஆம் ஆண்டு வெளியான சென்னை 2 சிங்கப்பூர் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

திட்டம் இரண்டு, நடுவன், உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இருவரும் நேற்று இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இருவரும் ஜோடியாக இருக்கும் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள மது ஷாலினி, நாங்கள் பெற்ற அனைத்து அன்புக்கும் நன்றி. எங்கள் இதயங்களில் நம்பிக்கையுடனும் நன்றியுடனும் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!