போக்சோவில் 2 முறை கைது… காதலியை போராடி கரம் பிடித்த வாலிபர்!

மதுரை நியூ ஜெயில் ரோடு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது24). அவரும் அதே ஊரைச் சேர்ந்த சண்முகப்பிரியா(19) என்பவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தனர்.

காதலர்கள் இரண்டு முறை திருமணம் செய்து கொள்ள முயன்றுள்ளனர். இதில் அஜித் குமார் வயது குறைவான பெண்ணை திருமணம் செய்ததால் 2 முறை போக்சோ சட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்று வந்தார்.

தற்போது அந்த போக்சோ சட்ட வழக்கு நடைபெற்று கொண்டுள்ளது. இந்நிலையில் சண்முகப்பிரியாவுக்கு திருமண வயதாகியது. இதனையடுத்து அஜித்குமார், சண்முகப்பிரியாவை அழைத்துக்கொண்டு சூலூர் போலீஸ் நிலையம் வந்து அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் அஜித்குமார், சண்முகப்பிரியா ஆகியோர் திருமணமான கையுடன் மாலையும் கழுத்துமாக போலீஸ் நிலையம் வந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனை விசாரித்த சப்-இன்ஸ்பெக்டர் ஜான் ரோஸ் இருவரது வீட்டுக்கும் தகவல் தெரிவித்தார். அப்போது இருமுறை இதே பெண்ணை திருமண செய்ய முயற்சித்ததற்காக அஜித் குமார் போக்சோ சட்டத்தில் கைதாகி இருப்பதும் தெரியவந்தது. அதே பெண்ணை திருமணம் செய்யவேண்டும் என மன உறுதியுடன் இருந்த அஜித் குமார் மற்றும் சண்முகப்பிரியா ஆகியோரை அங்கிருந்தோர் வாழ்த்தினர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!