பேஸ்புக் மூலம் பழகி அனுபவ கதையை எழுதிய ‘விபரீத விக்ரம்’ – பெண்களே உஷார்!

பேஸ்புக் மூலம் பழகி, உல்லாசம் அனுபவித்து, வீடியோ எடுத்து மிரட்டியதாக வாலிபர் மீது முன்னாள் காதலி அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த எம்.ஏ கம்யூனிகேஷன் படித்த ராணி (பெயர்மாற்றம்) என்ற பெண் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அதில், கடந்த 2016ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக, 2019ம் ஆண்டு விவகாரத்து பெற்றேன்.


தனியார் நிறுவனத்தில், பகுதி நேரமாக பணியாற்றி வருகிறேன். அப்போது, 2020ம் ஆண்டில், திருநின்றவூர், அனெக்ஸ், இந்திரா நகரை சேர்ந்த விக்ரம் (33) என்பவர் பேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பினார்.

குறும்படம் ஒன்றுக்கு வாய்ஸ் ஓவர் தர வேண்டும், நீங்கள் ஆர்வமாக இருந்தால் இந்த எண்ணுக்கு கால் செய்யுங்கள் என கூறி ஒரு மொபைல் என்னை பகிர்ந்தார். அதன்பேரில், இருவரும் பழகி, பின்னர், நாங்கள் நேரில் சந்தித்தோம். 2021ம் ஆண்டு, பேஸ் புக் லைவ் மூலம், விக்ரம் , தன்னை காதலிப்பதாக கூறினார். நான் மற்றுக்கவே, கெஞ்சி கூத்தாடி காதலிக்க வைத்தார்.

அவரை நான் முழுமையாக நம்பினேன். ஐதராபாத்துக்கு அழைத்து சென்றார். அங்கு ஹோட்டலில் அறை எடுத்து, எனக்கு ரகசியமாக தாலி கட்டி, ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டதாக கூறி, உறவு வைத்துக்கொண்டார். விக்ரம் பெற்றோருக்கு, நான் ஏற்கனவே மணமாகி விவகாரத்து பெற்றவர் என தெரியவந்தது.

இதனால், கடந்த 2021ம் செப்டம்பர் மாதம், அரும்பாக்கத்தில், ஒர் கோயிலில் வைத்து நிச்சயார்த்தம் செய்தார். ஆனால், திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தவே அதுகுறித்து விக்ரமிடம் கேட்டேன். அப்போது வீட்டைவிட்டு சென்ற விக்ரம் அதோடு தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், எனது வீட்டில் இருந்த விக்ரமின் பழைய செல்போனை எடுத்து பார்த்ததில், பல பெண்களுடன் விக்ரமுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

பல பெண்களின் ஆபாச புகைப்படங்களும் அதில் இருந்தன. ஒரு நாள், என் வீட்டுக்கு வந்த விக்ரம், உன்னுடன் உல்லாசம் அனுபவித்த வீடியோ உள்ளது. அதை வெளியிடாமல் இருக்க 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினார். வில்லிவாக்கம் போலீசில் புகார் கொடுத்தேன். நடவடிக்கை இல்லை. இந்த நிலையில், அவர், தி. நகரில், வேறொரு பெண்ணை திருமணம் செய்வதாக தகவல் கிடைத்தது. அந்த பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என புகார் அளித்தேன் என்றார்.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், திரு நின்றவூர் போலீசார் விக்ரமை கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் விக்ரம் குறித்து மேலும் சில அதிர்ச்சி தகவல் கிடைத்தன. அதாவது, டேட்டிங் உள்ளிட்ட ஆப் மூலம் பெண்களுக்கு வலைவிரிக்கும் விக்ரம் சிக்கும் பெண்களுடன் உடலுறவு வைத்து கொள்வதும் பின்னர் அதுகுறித்த அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் கதையாக எழுதுவதையும் வாடிக்கையாக வைத்து வந்துள்ளார்.

இதனால், பாதிக்கப்பட்ட பெண்கள் செய்வதறியாமல் உள்ளனர். நேரில் சந்தித்து உண்டாகும் பழக்கமே சில நேரங்களில் ஆபத்தில் முடிகின்ற சூழலில், சமூக வலைத்தளம் மூலம் வலைவிரிக்கும் நபர்களை ஆரம்பத்திலேயே உதறிவிடுவது பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் நல்லது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!