கேலி செய்தவரை தட்டிகேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

தாக்குதலால் கடும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கும் அப்பெண்ணின் குடும்பத்தினர், போபாலில் இருப்பது தங்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்று கருதுவதாகக் கூறுகிறார்கள்.

தன்னை கேலி செய்தவர்களில் ஒருவரின் கன்னத்தில் அறைந்த பெண்ணின் முகத்தில் பிளேடால் தாக்கியதில், அவரது முகத்தில் 118 தையல்கள் போடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் போப்பால் நகரில் ஜூன் 9ஆம் தேதி, மூன்று வாலிபர்கள் 40 வயது பெண் ஒருவரைன் கேலி, கிண்டல் செய்துள்ளனர். அவர்களில் ஒருவரை அப்பெண் கன்னத்தில் அறைந்ததையடுத்து, அப்பெண்ணின் முகத்தில் அவர்கள் பிளேடால் தாக்கியுள்ளனர்.

பிளேடால் வெட்டப்பட்ட காயங்களை மருத்துவர்கள் 118 தையல்கள் போட்டு சரி செய்துள்ளனர். மூன்று குற்றவாளிகளில் இரண்டு பேர் சிறுவர்கள் என்று கூறப்படுகிறது. மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேர் மீதும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!