பிரசவத்திற்கு போன மனைவி… கணவர் எடுத்த விபரீதமுடிவு!

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் சத்யாநகா் பகுதியை சோ்ந்தவா் மனோகரன் என்பவரின் மகன் ஜெயகுமாா்(வயது 38). இவா் ஒரு தனியாா் நிறுவனத்தில் பனியாளா்களை ஏற்றிசெல்லும் பேருந்தை ஒப்பந்த முறையில் எடுத்து நடத்தி வருகிறாா் .

இந்நிலையில் இவருக்கும் பெங்களூா் கிருஷ்ணராஜபுரம் பகுதியை சோ்ந்த கண்ணியப்பன் என்பவருடைய மகள் தீபாவிற்க்கும் கடந்த 5-ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 4-வயதில் தனுஷ்கா என்ற மகளும், ஒன்றரை வயதில் ராகேஷ் என்ற மகனும் உள்ளனா். இந்நிலையில் இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பெங்களூர் சென்ற தீபா இதுவரை கணவா் வீட்டிற்க்கு திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக கடந்த 8 -ம் தேதி ஜெயகுமார் பெங்களூா் சென்றுள்ளாா். ஆனால் மனைவி தீபா மற்றும் குடும்பத்தினா் இவர் மீது கிருஷ்ணராஜபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் ஜெயகுமாரை காவல் நிலையம் அழைத்து விசாரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடலில் பலத்த காயங்களுடனும், கம்பால் அடித்ததற்கான தழும்புகளுடனும் கடந்த 9-ம் தேதி மீண்டும் வீடு திருப்பியுள்ளாா்.

வீடு திரும்பிய பிறகு அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலையில் மனைவி தன் மீது புகார் கொடுத்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரம் பாா்ர்த்து படுக்கை அறையில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இது குறித்து உறவினா்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்க்கு வந்த பாணாவரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!