சாலையோரம் அழுகிய நிலையில் மூதாட்டி பிணமாக மீட்பு!

பொன்னமராவதி தாலுகா அலுவலகம் அருகில் செம்பொட்டல் என்ற இடத்தில் சாலை ஓரம் அழுகிய நிலையில் மூதாட்டி பிணம் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன், சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மூதாட்டி உடலை மீட்டு வலையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கடந்த 10-ந் தேதி காணாமல் போன வலையப்பட்டி ராஜூவ் நகரை சேர்ந்த அடைக்கன் மனைவி மென்னி (வயத 70) தான் என அவர்களது உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காணாமல் போன மூதாட்டியை யாரும் அடித்துக் கொன்று உடலை இங்கே போட்டு சென்றனரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!