தந்தையின் இறுதி சடங்கை செய்ய பணம் இல்லாமல் தவித்த பிள்ளைகள்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டிணமங்கலம் கிராமத்தை சேர்ந்த கூலிதொழிலாளி ஜெயசீலன் (46). இவரது மனைவி மகேஸ்வரி தம்பதியினருக்கு சக்திவேல் (17) ரஞ்சித் (15) வரலட்சுமி (11) ஆகிய 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உமாமகேஸ்வரி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் 10 ஆண்டுகளாக ஜெயசீலன் கூலி வேலை செய்து தனது இரண்டு மகன்களையும், ஒரு மகளையும் படிக்க வைத்து காப்பாற்றியுள்ளார். தற்பொழுது சக்திவேல் 12-ம் வகுப்பு, ரஞ்சித் 10-ம் வகுப்பு, வரலட்சுமி 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கூலி வேலை செய்து கொண்டிருந்த ஜெயசீலன் நேற்று முன்தினம் இரவு திடீர் உடல்நிலை குறைவால் இறந்தார். அதிர்ச்சியடைந்த குழந்தைகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். தந்தையின் இறுதி சடங்கு செய்யகூட பணம் இல்லாமல் நிலைகுலைந்து நின்றனர்.

இதனைக் கண்ட ராட்டிணமங்கலம் புதிய காலனி பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணம் வசூல் செய்து இறுதி சடங்குகளை செய்தனர். தாயை இழந்து தந்தையின் அரவணைப்பால் 10 ஆண்டு காலம் வாழ்ந்து வந்த மகள் மற்றும் மகன்கள் தந்தையின் இறுதி சடங்கை செய்வதற்கு கூட பணம் இல்லாமல் பரிதாபமாக நின்ற சம்பவம் ராட்டிணமங்கலம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. இது மட்டுமன்றி 3 குழந்தைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக உள்ளன. அவர்களுக்கு அரசு உதவி செய்யவேண்டும் என உதவி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!