விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி பரிதாபமாக மரணம்… நடந்தது என்ன?


மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 4 வயது சிறுமி மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள சந்த்கிரி பகுதியைச் சேர்ந்த ஷாலினி ஹண்ஜ் என்ற 4 வயது சிறுமி இன்று காலை 10 ரூபாய் நாணயத்துடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.


திடீரென சிறுமி நாணயத்தை விழுங்கினாள். அது அவள் தொண்டையில் சிக்கியது. இதையடுத்து சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

சிறுமி மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விளையாடிக் கொண்டிருந்த சிறுமி நாணயத்தை விழுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!