சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பிரணீதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரணீதா. அதன் பின்னர் கார்த்தி ஜோடியாக சகுனி படத்திலும், சூர்யாவுக்கு ஜோடியாக மாஸ் படத்திலும் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் ரசிகர்களுக்கு குட்நியூஸ் ஒன்றை கூறியுள்ளார் பிரணீதா.
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வந்தார் பிரணீதா. இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் தனது நீண்ட நாள் காதலரான பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜுவை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வந்த பிரணீதா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது கணவரின் பிறந்தநாளன்று தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராம் வாயிலாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து கடந்த மாதம் இவரின் வளைகாப்பு புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நடிகை பிரணீதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து நடிகை பிரணீதாவுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!