மீண்டும் விக்னேஷ் சிவனுக்கு கல்யாணம் நடக்கும்… பகீர் கிளப்பும் பெரியப்பா!

விக்னேஷ் சிவனுக்கு மீண்டும் திருமணம் நடைபெறும் என அவரது பெரியப்பா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலங்கள் பங்கேற்பு

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் நேற்று திருமணம் செய்து கொண்டனர். சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இதில் ஷாருக்கான், ரஜினிகாந்த், கார்த்தி, சூர்யா, விஜய் சேதுபதி, விக்ரம் பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

அழைக்கவில்லை

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது திருமணத்திற்கு சொந்த பெரியப்பா பெரியம்மாவை அழைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடியை பூர்விகமாக கொண்டவர் விக்னேஷ் சிவன். இவரது தந்தை சிவ கொழுந்து போலீஸாக பணியாற்றியதால் சிறுவயதிலேயே சென்னைக்கு குடி பெயர்ந்து விட்டனர்.

பெரியப்பா வருத்தம்

தற்போது விக்னேஷ் சிவன் தனது திருமணத்திற்கு பெரியப்பா பெரியம்மா உட்பட உறவினர்கள் யாரையுமே அழைக்காதது அவர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்டம் லால்குடியில் வசிக்கும் அவரது பெரியப்பா மாணிக்கம் வேதனையுடன் தெரிவித்திருப்பதாவது, எங்களின் பெற்றோருக்கு 8 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள். நான் தான் குடும்பத்தில் மூத்தவன்.

சொந்த குழந்தையாக..

விக்னேஷ் சிவனின் அப்பா, அதாவது எனது தம்பி எனக்கு அடுத்து பிறந்தவர். வேலை நிமித்தமாக பிரிந்து வெவ்வேறு இடங்களில் வசித்து வருகிறோம். எனது மனைவி பெயர் பிரேமா. எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் நாங்கள் விக்னேஷ் சிவனையும், அவரது சகோதரி ஐஸ்வர்யாவையும் எங்களது சொந்த குழந்தையாகவே பார்த்தோம்.

ஆலோசிக்கவில்லை

எனது தம்பி அதாவது விக்னேஷ் சிவனின் அப்பா இறந்த பிறகு விக்னேஷ் சிவன் உள்ளிட்ட யாரிடமும் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. விக்னேஷ் சிவன் பெரியவர்களை கலந்து ஆலோசித்து இந்த திருமண ஏற்பாடுகளை செய்யாதது எனக்கும், எனது மனைவிக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

திரும்ப நடக்கும்

விக்னேஷ் சிவன் எங்களை திருமணத்திற்கும் அழைக்கவில்லை. அதோடு காலை 9 -10.30 AM திருமண நேரம் என்பது குளிகை நேரம். குளிகை நேரத்தில் திருமணம் மற்றும் வீட்டில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் அது திரும்பத் திரும்ப நடைபெறும் என்பது ஐதிகம். விக்னேஷ் சிவன் குளிகை நேரத்தில் நயன்தாரா கழுத்தில் தாலி கட்டியுள்ளார். அவர்கள் நன்றாக இருக்க வேண்டும்.

வேதனையாக உள்ளது

இந்த மாதிரி வீட்டில் நடக்கும் முதல் திருமண நிகழ்ச்சியில் எங்கள் குடும்பத்தில் 11 பேர் வாரிசுகள் உள்ளனர். அவர்கள் யாரையும் கலந்து கொள்ளாமல் விக்னேஷ் சிவன் திருமணம் செய்திருப்பது குடும்பத்திற்கு மிகுந்த மன வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!