நயன் – விக்கி திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்தது யார்னு தெரியுமா..?

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்தது யார் என்று தெரிய வந்துள்ளது.

மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் சிம்பிளாக நடந்தது. திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, கார்த்தி, மணிரத்னம், அஜித், ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

அஜித் தன் குடும்பத்துடன் வந்திருந்தார். திருமணம் நடந்த இடத்திற்கு வெளியே கூடிய ரசிகர்களோ, தலயை பார்க்காமல் இங்கிருந்து நகர மாட்டோம் என்று அடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவனிடம் தாலி எடுத்துக் கொடுத்தது வேறு யாரும் இல்லை நம்ம சூப்பர் ஸ்டார் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.


ரஜினி தன் அக்மார்க் வெள்ளை நிற குர்தாவில் வந்ததை பார்த்தே ரசிகர்கள் உற்சாகம் அடைந்தார்கள். இந்நிலையில் அவர் தான் தாலியை எடுத்துக் கொடுத்தார் என்பதை அறிந்து சந்தோஷத்தில் குதிக்கிறார்கள்.

நயன்தாராவின் திருமணத்திற்கு திரையுலகை சேர்ந்த ஒரு சிலருக்கு தான் அழைப்பு என்றார்கள். ஆனால் திருமணத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தியுள்ளனர்.


இதற்கிடையே பிரபல மலையாள நடிகரான திலீப்பை திருமணத்தில் பார்த்த ரசிகர்கள் கோபம் அடைந்திருக்கிறார்கள். நடிகையின் பாலியல் வழக்கில் சிக்கிய அவரை போய் ஏன் நயன்தாரா அழைத்திருக்கிறார் என கேள்வி எழுப்பியுள்ளனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!