மகன் உடலை வாங்க வீடு, வீடாக பிச்சை எடுத்த பெற்றோர்கள்!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் தாகூர். இவரது மகன் சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். இந்த நிலையில், மகேஷ் தாகூரின் மகன் இறந்து விட்டதாகவும், அவரது உடல் சமஸ்திபூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ் தாகூர் மனைவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்றார். தனது மகன் உடலை தரும்படி ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கேட்டார். ஆனால் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே உடலை தருவோம் என்று ஊழியர்கள் மகேஷ் தாகூரிடம் கூறினார்.

ஏழையான அவரிடம் பணம் இல்லை. இதனால் ஆஸ்பத்திரி ஊழியர்கள் கேட்ட லஞ்ச பணத்துக்காக ஊர் மக்களிடம் பிச்சை எடுக்க மகேஷ் தாகூர் முடிவு செய்தார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!