மனைவியின் கையை வெட்டி துண்டாக்கிய கொடூர கணவன்… அதிர வைத்த காரணம்!

மேற்குவங்கத்தில் அரசு வேலை கிடைத்த மனைவியை வேலைக்கு செல்லவிடாமல் தடுக்க அவரது வலது கை மணிக்கட்டை கணவனே வெட்டி துண்டாக்கி மறைத்து வைத்த சம்பவம் நடந்தது.

மேற்கு வங்க மாநிலம், கிழக்கு பர்த்வான் மாவட்டம் கேதுகிராம் பகுதியைச் சேர்ந்தவர் ஷரிபுல். இவரது மனைவி ரேணு காதுன். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.

ரேணுவுக்கு அரசு மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணி உத்தரவு கிடைத்துள்ளது. ஆனால் அரசு பணிக்கு செல்ல வேண்டாம் என கணவர் ஷரிபுல் தடுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று ரேணுகாதுன் தூங்கி கொண்டிருந்த போது, அவரது வலதுமணிக்கட்டை கத்தியால் வெட்டி துண்டாக்கினான் ஷரிபுல், துண்டாக்கிய கையை இணைத்து ஆபரேஷன் செய்துவிடுவார்களோ எனக் கருதி, துண்டான கையை மறைத்து வைத்து விட்டார்.

இது குறித்து ரேணுகாதுவின் தந்தை போலீசில் புகார் கூறியதையடுத்து அவரது கணவர், ஷரிபுல் தலைமறைவானார். மனைவிக்கு அரசு வேலை கிடைத்தால் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவார் என்ற சந்தேகத்தில் அரசு வேலையில் சேர்வதை தடுக்கவே அவரது கையை வெட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.-News & image Credit: dinamalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!