கணவன் கண்முன்னே பஸ்சக்கரத்தில் சிக்கி மனைவி துடிதுடித்து சாவு!

போடியில் பஸ்சக்கரத்தில் சிக்கி கணவன் கண்முன்னே துடிதுடித்து மனைவி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள மேலசொக்கநாதபுரம் அழகர்சாமி தெருவை சேர்ந்தவர் ஜெயராமன்(63). இவரது மனைவி ரமாதேவி(52). இவரது பேத்திக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்பத்திரிக்கு செல்வத ற்காக ஜெயராமன் தனது மோட்டார் சைக்கிளில் மனைவியை பின்னால் அமரவைத்தும், பேத்தியை முன்னால் அமரவைத்தும் போடி நோக்கி வந்தார்.

அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியார் பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் ரமாதேவி பஸ்சக்கரத்தில் சிக்கி கணவன் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்தார்.

ஜெயராமன் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து போடி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து தனியார் பஸ்சை ஓட்டிவந்த திம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகன்(54) என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!