வளர்ப்பு நாயை இழுத்துச் செல்லும் சிறுத்தை- பரபரப்பு வீடியோ!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள முங்சரே கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, வளர்ப்பு நாயை தாக்கியது. சிவப்பு கழுத்து பட்டை அணிந்திருந்த அந்த கருப்பு நாய் வீட்டின் ஒரு தாழ்வான சுவரில் அமர்ந்திருக்கிறது.

சில வினாடிகளுக்குப் பிறகு, அங்கு வரும் ஒரு சிறுத்தை கண்ட அந்த நாய் குரைத்து விரட்ட முயற்சிக்கிறது. முதலில் பின்வாங்கும் சிறுத்தை, திரும்பி பாய்ந்து வந்து நாயைத் தாக்குகிறது. சிறிது நேர சண்டைக்குப் பிறகு, நாயை கவ்விக் கொண்டு அங்கிருந்து சிறுத்தை ஓடுகிறது.

அந்த வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சி குறித்த வீடியோ, வெளியான உடனே ட்விட்டரில் 20,000க்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

சிறுத்தை தாக்குதல் குறித்து பேசிய நாசிக் வனத்துறை துணைப் பாதுகாவலர் பங்கஜ் கர்க், இந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கிராம மக்கள் இரவில் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!