இயக்குநருடன் டேட்டிங்… 3வது திருமணத்திற்கு ரெடியான பிரபல நடிகை!

பிரபல நடிகையான மீரா ஜாஸ்மின் பிரபல இயக்குநர் ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


பிரபல மலையாள நடிகையான மீரா ஜாஸ்மின் தமிழில் ரன் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து புதிய கீதை, ஆஞ்சனேயா, ஆயுத எழுத்து, சண்டக்கோழி, மெர்குரி பூக்கள், பரட்டை என்கிற அழகு சுந்தரம், மம்பட்டியான், இங்க என்ன சொல்லுது உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சர்ச்சைகள்

சில சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார் நடிகை மீரா ஜாஸ்மின். கேரளாவில் இந்துக்கள் வழிபடும் தலிபரம்பா கோவிலில் அத்துமீறி நுழைந்ததாக மீரா ஜாஸ்மினுக்கு எதிராக அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கோவிலின் விதிகளை மீறியதாக 10000 ரூபாய் அபாராதம் செலுத்தினார்.

படங்களில் தடை

பின்னர் நடிகர் திலீப்பின் படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் மலையாள சினிமாவில் நடிக்க மீரா ஜாஸ்மினுக்கு சில காலம் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் தடை பற்றியெல்லாம் தனக்கு தெரியவே தெரியாது, மலையாள படங்களில் நடித்து கொண்டுதான் இருக்கிறேன் என ஷாக் கொடுத்தார். அதுமட்டுமின்றி காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார் மீரா ஜாஸ்மின்.

கணவரை பிரிந்து

ஆனால் திருமணம் ஆன 2 ஆண்டுகளிலேயே கணவரை பிரிந்தார் நடிகை மீரா ஜாஸ்மின். மேலும் கணவரை விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில் பிரபல இயக்குநருடன் நடிகை மீரா ஜாஸ்மின் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காதல் சர்ச்சை

மேண்டலின் ராஜேஷுடன் காதல் உறவில் இருந்தார் மீரா ஜாஸ்மின். அவரைதான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அறிவித்தார். ஆனால் அந்த காதல் திருமணத்திற்கு முன்பே தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்த மீரா ஜாஸ்மின் துபாயில் செட்டிலானார்.

இயக்குநருடன் நெருக்கம்

சமீபத்தில் மீரா ஜாஸ்மின் இயக்குநர் அருண் கோபியை கட்டியணைத்தப்படி நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியானது. இந்நிலையில் இருவரும் காதல் உறவில் இருப்பதாகவும் மீரா ஜாஸ்மின் விரைவில் அருண் கோபியை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!