திருமணமான 11 மாதத்தில் தொழிலாளிக்கு நடந்த பரிதாபம்..!

திருமணமான 11 மாதத்தில் விபத்தில் தொழிலாளி பலியானார்.

விழுப்புரம் மாவட்டம் புதுப்பாக்கம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகன் ஜெயபால் (வயது 38) தொழிலாளி. இவருக்கும், கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவருக்கும் கடந்த 11 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கண்டமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஜெயபால் தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்று சிகிச்சை முடிந்து புதுவை – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் இருவரும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த சேகர் மகன் கவுதம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஜெயபால் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் ஜெயபால், செல்வி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெயபால் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 11 மாதத்தில் கணவர் இறந்ததால் மனைவி மிகுந்த சோகத்தில் உள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!