நொறுங்கி போய்விட்டேன்… குக் வித் கோமாளி செஃப் வெங்கடேஷ் பட் உருக்கம்!

கடந்த இரண்டு நாட்களாக நொறுங்கி போய்விட்டதாக குக் வித் கோமாளி செஃப் வெங்கடேஷ் பட் உருக்கமாக தெரிவித்துள்ளார்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. முதல் சீசன் பெரும் ஹிட்டானதை தொடர்ந்து அடுத்தடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு காமெடியுடன் கொடுக்க முடியுமா ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

குழந்தை பெற்ற பெண்

தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிப்பரப்பான எபிசோடில் செஃப் வெங்கடேஷ் பட் கூறிய ஒரு விஷயம் பெரும் ட்ரோலானது. அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து தனக்கு குழந்தை பிறந்ததாக ஒரு பெண் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

நொறுங்கி போய்விட்டேன்

வெங்கடேஷ் பட் பங்கமாக ட்ரோல் செய்யப்பட்டார். அவரை வைத்து கன்னாபின்னாவென மீம்ஸ்கள் குவிந்தன. அதேநேரம் வெங்கடேஷ் பட்டின் கருத்துக்கு ஆதரவு குரல்களும் எழுந்தன. இந்நிலையில் வெங்கடேஷ் பட் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து உருக்கமாக விளக்கம் அளித்துள்ளார். அதில் பட் கூறியிருப்பதாவது, “ 2 நாட்களாக நிஜமாகவே நொறுங்கி போய்விட்டேன். கவலை அதிகமானது. என்னை ட்ரோல் செய்ததால் நான் கவலைப்படவில்லை.

மனிதநேயம் செத்துவிட்டது

மனிதநேயம் செத்துவிட்டதாக மீம்ஸ்கள் என்னை உணரவைத்தது. மனிதம் சாக கூடாது, கடவுள் இருக்கிறார் குமாரு. நல்லவர்கள் இன்னும் இவ்வுலகில் இருக்கிறார்கள். கீழே உள்ள படம் இப்போது தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. குழந்தை செல்வம் உள்ளவர்களுக்குதான் தெரியும் அது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று. என்னை கிண்டல் செய்கிறேன் என நினைத்து உங்களை நீங்களே தரம் தாழ்த்தி கொள்ளாதீர்கள் “ என்று தெரிவித்துள்ளார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!