நான் நல்லா தான் இருக்கன்… நடிகை நட்சத்திரா விளக்கம்.!

ஸ்ரீநிதியின் கண்ணீர் வீடியோ பரபரப்பான நிலையில் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் நட்சத்திரா.

யாரடி நீ மோகனி தொலைக்காட்சி தொடர் புகழ் நட்சத்திராவை அவரின் காதலர் வீட்டில் பிடித்து வைத்திருப்பதாக நடிகை ஸ்ரீநிதி கண்ணீர் வீடியோ வெளியிட்டார். அவரை காப்பாற்றாவிட்டால் வி.ஜே.சித்ராவுக்கு நடந்தது தான் நக்ஷுவுக்கும் நடக்கும் என்றார். இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்து நட்சத்திரா இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

விளக்கம்

அந்த வீடியோவில் நட்சத்திரா கூறியிருப்பதாவது, ஒரு 3, 4 நாட்களாக ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. நான் பிரச்சனையில் இருக்கிறேன். யாரோ ஃபோர்ஸ் பண்ணி புடுச்சு வச்சிருக்காங்க. நான் லவ் பண்றவரின் குடும்பம் வந்து என்னை எங்கும் விடாமல் பிடித்து வச்சிருக்காங்கனு. நான் நல்லா தான் இருக்கேன். தினமும் ஷூட்டிங்கிற்கு போயிட்டு வந்துட்டு தான் இருக்கேன் என்றார்.

பிரச்சனை

எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. இதை பற்றி ஒரு வீடியோவை அன்றே போட்டிருக்கலாம். அவளை ஃபாலோ பண்ணுபவர்களுக்கு தெரியும். அவ சின்னதா டிப்ரஷனில் இருக்கா. அதனால் நீங்கள் இதை பெருசா எடுத்துக்க மாட்டீங்கனு நினைத்து தான் விட்டுட்டேன். ஆனால் என் மீது இருக்கும் அக்கறையில் தான் நீங்கள் இப்படி கேட்டுக்கிட்டு இருக்கீங்கனு தெரியும் என நட்சத்திரா தெரிவித்துள்ளார்.

கால்ஸ்

என்னுடன் இருப்பவர்களுக்கும் சரி, எனக்கும் சரி, நிறைய போன் கால்ஸ், மெசேஜ் வருது. உங்களுக்கு ஏதும் பிரச்சனை இல்லைல, சேஃபா தானே இருக்கீங்கனு கேட்கிறாங்க. நிஜமா எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. நான் பத்திரமாக இருக்கேன். சந்தோஷமாக இருக்கேன், நிம்மதியாக இருக்கேன். இந்த நியூஸை ரொம்ப பெருசாக்காதீங்க. சின்ன விஷயம் தான் என்றார் நட்சத்திரா.

தெரியாது

அவளுக்கு எதை பப்ளிக்கில் பேசணும்னு, பர்சனலா வச்சுக்கணும்னு தெரியாது. அதில் ஏதேதோ பண்ணிக்கிட்டு இருக்கா. பார்க்கும் உங்களுக்கே தெரியும். அதனால் இதை பெருசா ஆக்காதீங்க, விட்டுடுங்க. நான் நிஜமா சந்தோஷமாக இருக்கேன். நன்றி என நட்சத்திரா கூறியிருக்கிறார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!